நூறு மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கம், விமான நிலையத்தில் சிக்கியது

🕔 March 20, 2024

நூறு மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கடத்திச் செல்ல முற்பட்ட இரு பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (19) கைது செய்யப்பட்டனர்.

இரண்டு பயணிகளும் சுமார் 05 கிலோ எடையுள்ள தங்க நகைகளை வைத்திருந்தனர் என, இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் துபாயில் இருந்து நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

மேற்படி இருவரும் அம்பலாங்கொடை மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்