முச்சக்கர வண்டி – லொறி மோதி விபத்து : மூவர் மரணம்
கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் பொத்துஹெர பகுதியிலுள்ள பொலுகொல்ல சந்தியில் நேற்று (06) இரவு இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முச்சக்கர வண்டியொன்றும் மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர் பலத்த காயங்களுடன் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூவர் உயிரிழந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.