சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு

🕔 March 5, 2024

பாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்ற பிரதிப் பொதுச் செயலாளரிடம் இன்று (05) கையளிக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், ரோஹினி குமாரி விஜேரத்ன, ஹேஷா விதானகே, மனோ கணேசன், றிஷாத் பதியுதீன், எம்.ஏ. சுமந்திரன், எஸ்.எம். மரிக்கார், ரஞ்சித் மத்தும பண்டார, தலதா அதுகோரள, விஜித ஹேரத் மற்றும் சந்திம வீரக்கொடி உள்ளிட்ட 44 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் கையொப்பமிட்டுள்ளனர்.

இணைய பாதுகாப்பு மசோதாவின் 13, 17, 20, 33 (6), 34 (1), 35 (1), 21, 22 மற்றும் 33 ஆகிய பிரிவுகள் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைகளை சபாநாயகர் புறக்கணித்ததாக நம்பிக்கையில்லா தீர்மானத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலம் இணைய பாதுகாப்பு சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பை வாக்கெடுப்பின்றி நிறைவேற்ற அனுமதித்ததாகவும், குழுநிலையில் பிளவுபடுமாறு எதிர்க்கட்சி பிரதம கொறடா விடுத்த அழைப்பை புறக்கணித்ததாகவும் சபாநாயகர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும், அரசியலமைப்பு பேரவையின் ஏனைய உறுப்பினர்கள் சமன்பாட்டின் போது, ஐ.ஜி. தேசபந்து தென்னகோனின் நியமனத்தை உறுதிப்படுத்துவதற்காக சபாநாயகர் ‘அரசியலமைப்புக்கு முரணாகவும் சட்ட விரோதமாகவும்’ தனது தீர்க்கமான வாக்கைப் பயன்படுத்தியதாகவும் – எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நான்கு உறுப்பினர்கள் நியமனத்திற்கு ஆதரவாகவும் 2 பேர் எதிராகவும் வாக்களித்த அதேவேளை, 2 பேர் வருகை தரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும், வருமைக தராதவர்கள் எதிர்த்து வாக்களித்ததாகக் கருதி, பொலிஸ் மா அதிபரின் நியமனத்தை முன்னெடுப்பதற்கு சபாநாயகர் தனது தீர்மான வாக்கெடுப்பாக வாக்கைப் பயன்படுத்தினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்