பொலிஸார் இருவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு
பேலியகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பொலிஸாருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (04) மரண தண்டனை விதித்துள்ளது.
பேலியகொட பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கும் பொலிஸ் கொஸ்டபில் ஒருவருக்குமே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் திகதி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் பணிபுரிந்த சந்தர்ப்பத்தில் கையடக்க தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர், சந்தேகநபர் பேலியகொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
இதன்போது சந்தேகநபரை இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
குறித்த கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நிரூபனமாகியுள்ளன.
இந்தநிலையில், சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.