பஸ் கவிழ்ந்ததில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 36 பேர் காயம்
சியம்பலாண்டுவ பிரதேசத்தில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் 36 பேர் காயமடைந்துள்ளனர்.
இவர்களில் 24 பேர் பாடசாலை மாணவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ் ஒன்று – இன்று ( 29) காலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.