பிரதமர் வேட்பாளர் பசில்: உதயங்க தெரிவிப்பு

🕔 February 28, 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதமர் வேட்பாளராக – எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பசில் ராஜபக்ஷ களமிறங்குவார் என, ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு பசில் ராஜபக்ஷ அடுத்த வாரம் அமெரிக்காவில் இருந்து வரவுள்ளதாக, ராஜபக்ஷ குடும்பத்தின் நெருங்கிய உறவினர் உதயங்க வீரதுங்க கூறியுள்ளார்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவிடம் பேசிய அவர், நடாளுமன்ற தேர்தலே முதலில் நடத்தப்படும் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05ஆம் திகதி – பசில் ராஜபக்ஷ இலங்கைக்கு வரும் போது, அவருக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்படும் என்றும், வாகன அணிவகுப்பு அவரை கொழும்புக்கு அழைத்து வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்