ரஷ்யா, உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் தொடர்பான அறிவித்தல் குறித்து விசாரணை நடத்த உத்தரவு

🕔 February 25, 2024

ஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட அறிவத்தல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அமைச்சரவையின் முன் அனுமதியின்றி வெளியிடப்பட்ட அறிவித்தல் தொடர்பிலேயே – விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த சுற்றுலாப் பயணிகளுக்கு – முன்னர் வழங்கப்பட்ட வீசா நீடிப்புகளை ரத்து செய்ய இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக முடிவு செய்யவில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்