அட்டாளைச்சேனை அல் ஜென்னா பள்ளிவாசலின் தரைக்கு மாபிள் கற்கள் பதிப்பதற்கு சபீஸ் நிதியுதவி

🕔 February 13, 2024

ட்டாளைச்சேனை அல் ஜென்னா பள்ளிவாசலின் தரைக்கு – மாபிள் கற்கள் (டைல்ஸ்) பதிப்பதற்கான நிதியை, கிழக்கின் கேடயம் தலைவர் எஸ்.எம். சபீஸ் – பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் வழங்கினார்.

அல் ஜென்னா பள்ளிவாசல் நிருவாகத்தினரின் அழைப்பின் பேரில், அண்மையில் பள்ளிவாசலுக்கு சபீஸ் சென்றிருந்தார். அதன்போது – பள்ளிவாசலின் உள்தரை செப்பனிடப்பட்ட வேண்டிய தேவையினையும் எதிர்வரும் நோன்பு மாதத்துக்கு முன்னர் அதனை முடிவுறுத்த வேண்டியதன் அவசியத்தையும் நிர்வாகத்தினர் வலியுறுத்தினர்.

குறித்த வேலைக்கு பள்ளிவாசல் நிர்வாகத்தினர் ஏற்கனவே ஒரு தொகை நிதியை சேகரித்திருந்தமையினால், மீதமாகத் தேவைப்பட்ட நிதியினை அதன்போது சபீஸ் வழங்கி வைத்தார்

பள்ளிவாசல் தலைவர் எம்.பி. நஸீர், பள்ளிவாசல் பொருளாளரும் முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழு தலைவருமான எஸ்.எல்.ஏ. ஹலீம் ஆகியோர் உட்பட இன்னும் பலர் – இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்