14 வயது சிறுமியைக் கடத்தி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயது இளைஞர், அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது

🕔 February 7, 2024

– அஹமட் –

தினான்கு வயதுடைய சிறுமியொருவரைக் கடத்திச் சென்று – பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கினார் எனும் குற்றச்சாட்டில், இளைஞர் ஒருவரை அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவினர் இன்று (07) கைது செய்தனர்.

சிறுமியின் பெற்றோர் இரண்டு நாட்களுக்கு முன்னர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி எம்.எச்.எம். ஹசீப் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையினை அடுத்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்படுகிறது.

சிறுமியொருவரைக் கடத்திச் சென்றமை மற்றும் அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் – சந்தேக நபர் மீது சுமத்தப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை நாளைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்