அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தினரின் சுதந்திர தின நிகழ்வு: புதிய தலைவர் கொடியேற்றி சிறப்பித்தார்

🕔 February 4, 2024

– றிசாத் ஏ காதர் –

நாட்டின் 76ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தினர் இன்று (04) நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் புதிய தலைவர் ஏ.எல்.எம். ஹனீஸ், பிரதித் தலைவர் எஸ்.எல்.எம். பளீல் பிஏ, உப செயலாளர் எம்.எஸ். ஜவ்பர், நிருவாக சபை உறுப்பினர்கள், மரைக்காயர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

இதன்போது பள்ளிவாசல் தலைவர் ஏ.எல்.எம். ஹனீீஸ் – தேசியக் கொடியை பள்ளிவாசல் வளாகத்தில் ஏற்றி வைத்தார்.

நிகழ்வில் நாட்டுக்காகவும் நாட்டு மக்களின் நலனுக்காகவும் துஆ (பிராத்தனை) மேற்கொள்ளப்பட்டது.

இதன் பின்னர் பெரிய பள்ளிவாசல் கலாசார மண்டபத்தில் சுதந்திர தினம் குறித்த உரைகளும் இடம்பெற்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்