அம்பாறை மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு அதிகளவில் கிடைக்கும் கணையான் மீன்கள்

🕔 February 1, 2024

– பாறுக் ஷிஹான் –

ம்பாறை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினை அடுத்து, அதிகளவான  கணையான் மீன்கள், அங்குள்ள ஆறு, குளங்களில் பிடிபடுகின்றன.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் காரணமாக, நீர் நிலைகள் மற்றும் ஆறுகளில் பெருமளவான கணையான் மீன்கள் கிடைக்கின்றன.

அம்பாறையிலுள்ள சேனநாயக்க சமுத்திரத்தின் கதவுகள் திறக்கப்பட்டு, பெருமளவான நீர் வெளியேற்றப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக, கணையான் மீன்கள் என்றுமில்லாதவாறு பிடிபடுகின்றன.

இவ்வாறு கிடைப்பவற்றில் 25 கிலோ எடையுள்ளபாரிய  கணையான் மீன்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம் மீன்கள் 1000 முதல் 09 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனையாகின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்