மைத்திரியின் மகள் வீட்டில் திருட்டு: 30 லட்சம் ரூபாய் இழப்பு என முறைப்பாடு

🕔 January 23, 2024

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளுக்குச் சொந்தமான பத்தரமுல்ல விக்கிரமசிங்கபுரத்திலுள்ள வீட்டில் சுமார் 03 மில்லியன் ரூபா பெறுமதியான பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

150,000 ரூபாய் பணம், தங்க முலாம் பூசப்பட்ட ஒட்டகச் சிலை, ஸ்மார்ட் கடிகாரம் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட 08 சிங்கப்பூர் நாணயங்கள் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதியின் மகளுடைய கணவர் வீடு திரும்பியபோது, கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு பொலிசாருக்கு உடனடியாக அறிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருடர்கள் கண்ணாடி கதவு வழியாக சமையலறைக்குள் நுழைந்துள்ளதாக முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளை அடையாளம் காண தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்