பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில், 40 வயது நபர் பலி: காரணமும் வெளியானது

🕔 January 19, 2024

பாதுகாப்பு சோதனைக்காக வாகனத்தை நிறுத்துமாறு வழங்கப்பட்ட உத்தரவை மீறிச் சென்ற வாகனம் மீது – பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 40 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் கிரியுல்ல நாரம்மல வீதியில் நேற்று (18) மாலை இடம்பெற்றுள்ளது.

வாகனத்தை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்டபோதும், சாரதி உத்தரவை மீறியதாகக் கூறப்படுகிறது. இதன்போது வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் அலவ்வ வதவகந்த பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டார்.

வாகனத்தை நிறுத்துமாறு சாரதிக்கு உத்தரவிட்டதையடுத்து, பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்களா என்பது தொடர்பில் விசேட விசாரணை நடத்தப்படும் என – குருநாகல் பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து – வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்