நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி ராஜிநாமா

🕔 January 9, 2024

னது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சமிந்த விஜேசிறி ராஜிநாமா செய்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, தனது ராஜினாமா கடிதத்தை நாடாாளுமன்ற சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளார்.

இன்று (ஜனவரி 09) காலை 09.30 மணிக்கு ஆரம்பமான 2024 ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு – உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, இன்று காலை நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட அனைத்து ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கறுப்பு உடை அணிந்து காணப்பட்டனர்,

அரசாங்கத்தின் பெறுமதி சேர் வரியை (VAT) 18% ஆக அதிகரித்தைமைக்கு இதன்போது எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்