அமைச்சர் ஹரினுடைய சகோதரி வீட்டில் 01 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட நகைகைளை கொள்ளையிட்ட மூவர் கைது

🕔 January 8, 2024

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெனாண்டோவின் சகோதரியினுடைய வீட்டில் கொள்ளையடித்த 03 பேரை வத்தளை பொலிஸ் நிலைய பெருங் குற்றப் பிரிவினர் நேற்று (07) கைது செய்துள்ளனர்.

கடந்த 02ஆம் திகதி ஆண் ஒருவர் – அமைச்சரின் சகோதரியின் வீட்டுக்குள் புகுந்து சுமார் 02 மணித்தியாலங்கள் அங்கு தங்கியிருந்து சுமார் 01 கோடியே 13 லட்சத்து 40,000 ரூபாவுக்கும அதிக பெறுமதியான நகைகளை கொள்ளையடித்துள்ளமை பாதுகாப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.

சந்தேக நபர் பல குற்றங்களுடன் தொடர்புடைய 47 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கொள்ளையிடப்பட்ட நகைகளில் – விற்பனை செய்யப்பட்ட மூன்று தங்க வளையல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் மூவரும் இன்று (08) வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்