நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அவர் அம்பலாங்கொட தொகுதிக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
விஜயலால் இன்று (01) காலை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவிடமிருந்து – கட்சி உறுப்புரிமையையும் நியமனக் கடிதத்தையும் பெற்றுக்கொண்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரான இவர், கடந்த பொதுத் தேர்தலின் போது – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.
விஜயலால் – மூன்று முறை தென் மாகாணத்தின் முதலமைச்சராகவும் பதவி வகித்திருந்தார். மேலும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநராகவும் இருந்துள்ளார்.