க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளிவரும் தினம் குறித்து, கல்வியமைச்சர் தகவல்
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போது, இதனை இந்தத் தகவலை ஊடகங்களிடம் கூறினார்.
2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை மே அல்லது ஜூன் மாதத்தில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.