பல கோடி ரூபாய்கள் பெறுமதியான ஹெரோயின், விமான நிலையத்தில் சிக்கியது

🕔 November 22, 2023

பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 10.5 கிலோ ஹெரோயின் – கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டது. இதன் பெறுமதி 270 மில்லியன் ரூபாயாகும்.

இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் கட்டுநாயக்க விமான சரக்கு முனைய சுங்க அலுவலகம் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது இந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் லாகூரில் இருந்து குறித்த ஹெரோயின் தொகுதி நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. குளியல் துவாய்கள் பலவற்றில் பொதியிடப்பட்ட இந்த போதைப் பொருள் கட்டுநாயக்க விமான சரக்கு முனையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

போதைப் பொருள் அடங்கிய பொதிகள் திஹாரியவில் உள்ள வர்த்தகர் ஒருவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவற்றினைப் பெற்றுச் செல்வதற்காக சுங்க அலுவலகத்துக்கு வந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்