அஸ்வெசும: கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரி பயனாளிகளின் ஓகஸ்ட் மாத கொடுப்பனவுக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க கூறியுள்ளார்.
இதன்படி, 1.36 மில்லியன் குடும்பங்களுக்கான 8.5 பில்லியன் ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளை மறுதினம் முதல் பயனாளிகளின் கணக்குகளில் குறித்த பணம் வைப்பிலிடப்படும் எனவும் நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.