ஆப்கானிஸ்தானில் நில அதிர்வு: 120 பேர் மரணம்

🕔 October 8, 2023

ப்கானிஸ்தானில் ஏற்பட்ட பாரிய நில அதிர்வு காரணமாக இதுவரையில் 120 பேர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்கு ஆப்கானிஸ்தானில், ஈரானுக்கு அருகே இந்த நில அதிர்வு உள்ளூர் நேரப்படி 11:00 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

இதுவரையில் 120 பேர் இறந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் மேற்கு நகரமான ஹெராட்டில் இருந்து 40 கிலோமீற்றர் தொலைவில் 6.3 மெக்னிடியுட் அளவில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.

குறித்த நில அதிர்வை அடுத்து, மூன்று தடவை மேலும் அதிர்வுகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்வதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஆப்கானிஸ்தானின் பக்டிகா மாகாணத்தில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர், பலர் வீடுகளை இழந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்