குற்றத்தை ஏற்றுக்கொண்ட ஞானசார தேரர் உள்ளிட்டோருக்கு 03 லட்சம் அபராம் விதித்து நீதிமன்றம் உத்தரவு

🕔 September 11, 2023

கொழும்பு நிப்போன் ஹோட்டலில் 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்புக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட குற்றவாளிக்கு 03 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று குறித்த வழக்கு எழுத்துக் கொள்ளப்பட்ட போது, ஞானசார தேரர் உள்ளிட்ட 07 சந்தேக நபர்களும் குற்றத்தை ஏற்றுக் கொண்டனர்.

இதன்படி சந்தேகநபர்களுக்கு 300,000 ரூபாய் நட்டஈடு வழங்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டதுடன், இவ்வாறான குற்றச் செயல்களை மீண்டும் செய்யக்கூடாது என கடுமையாக எச்சரித்தார்.

கொழும்பில் உள்ள நிப்பான் ஹோட்டலுக்குள் ஜாதிக பல சேனா தலைவர் வடரேக விஜித தேரர் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்புக்கு குற்றவாளிகள் இடையூறு ஏற்படுத்தினர்.

இதனையடுத்து விஜித தேரர் பொலிஸ் நிலையத்தில் ஞானசார தேரர் உள்ளிட்டோருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தார்.

கலகொட அத்தே ஞானசார தேரர், விதரந்தெனியே நந்த தேரர், வெலிமட சந்திர ரத்ன தேரர், வெல்லம்பிட்டியே சுமன தம்மா தேரர், ஆரியவங்ச சம்புத்த தேரர், சர்த்ராநந்த தேரர், பீ. வெவல மற்றும் பத்திரனகே குணவர்தன ஆகியோர் இந்த வழக்கில் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டிருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்