அரச தொலைக்காட்சி அலைவரிசை ‘சனல் ஐ’, அல்லிராஜா சுபாஸ்கரனின் ‘லைகா’வுக்கு குத்தகை அடிப்படையில் விற்பனை
அரச தொலைக்காட்சியான ‘சனல் ஐ’ அலைவரிசையினை பிரித்தானியாவை தளமாகக் கொண்டியங்கும் ‘லைகா’ நிறுவனத்துக்கு குத்தகை அடிப்படையில் அரசு வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்காக மாதாந்தம் 25 மில்லியன் ரூபாயினை அரசுக்கு லைகா நிறுவனம் செலுத்தும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
‘சனல் ஐ’ கடும் நஷ்டத்தில் இயங்குவதால் இந்தத் தீர்மானத்தை அரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ‘சுவர்ணவாஹினி’ சிங்கள அலைவரிசையினை ‘லைகா’ நிறுவனம் கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ‘ஸ்ரீலங்கா ரெலிகொம்’ நிறுவனத்தில் அரசு வசமுள்ள பங்குகளும் ‘லைகா’ நிறுவனத்துக்கு விற்கப்படும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக புகார்கள் கிளம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் பிரித்தானியா சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கு ‘லைகா’ நிறுவனத்தின் உரிமையாளர் அல்லிராஜா சுபாஸ்கரனை சந்தித்திருந்தார்.