பெண்ணின் நிர்வாண படங்களை கணவருக்கு அனுப்பப் போவதாக மிரட்டி, நகைகளைப் பறித்துச் சென்றவர் கைது

🕔 July 20, 2023

பெண் ஒருவருடன் தகாத உறவை வைத்திருந்த 23 வயது இளைஞன், அந்தப் பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை அவரின் கணவருக்கு அனுப்பிவைப்பதாக மிரட்டி, பெண்ணிடம் இருந்த தங்க நகைகளை வலுக்கட்டாயமாக பறித்தார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் நேற்று (19) செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரும் குறித்த பெண்ணும் ஹோட்டல் அறைக்குச் சென்று அவர்கள் ஒன்றாக இருந்த போது பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை சந்தேக நபர் எடுத்துள்ளார். அதன் பின்னர் அந்தப் படங்களை பெண்ணின் கணவரிடம காட்டப்போவதாக மிரட்டிய சந்தேக நபர் – அவரிடமிருந்து 1,785,000 ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை எடுத்துச் சென்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் நீர்கொழும்பு, கோமஸ்வத்த பகுதியில் வைத்து சில மணித்தியாலங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருடப்பட்ட தங்க நகைகள் – நீர்கொழும்பில் உள்ள கடையொன்றுக்கு விற்பனை செய்யப்பட்டிரு்நத நிலையில், சந்தேக நபரிடமிருந்து 04 கிராம் நிறையுடைய தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பைச் சேர்ந்த சந்தேக நபர் – நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்