சிறைவாசம் அனுபவிக்கும் முன்னாள் மேஜருக்கு, மீண்டும் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு

🕔 June 8, 2023

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னவுக்கு 06 மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (06) தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவின்படி, தற்போது ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்ன அனுபவிக்கும் 04 வருட சிறைத்தண்டனை நிறைவடைந்ததன் பின்னர் தற்போதைய சிறைத்தண்டனை ஆரம்பமாகும்.

அவருக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை உச்ச நீதிமன்றத்தால் 2023 ஜனவரியில் விதிக்கப்பட்டது.

சில நீதிபதிகளின் முடிவுகளுக்கு எதிராக 2019 டிசம்பரில் கருத்து வெளியிட்மைக்காக, ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னாவுக்கு ஏற்கனவே தண்டனை விதிக்கப்பட்டது.

இனிமேல் அவ்வாறான கருத்துக்களை வெளியிடமாட்டேன் என, நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்ன – நீதிமன்றில் உறுதியளித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்