கடலுக்கு குளிக்கச் சென்ற மாணவர்கள் சடலமாக மீட்பு: மட்டக்களப்பில் சோகம்

– கிருஷ்ணகுமார் –
கடலில் குளிக்கச் சென்ற மாணவர்கள் இருவர் மட்டகளப்பு – சவுக்கடி பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
நேற்று (06) மாலை வீட்டிலிருந்து வகுப்புக்கு செல்வதாக கூறிச்சென்ற மாணவர்களே இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 16 வயதுடைய கறுப்பங்கேணி விபுலானந்தா வித்தியாலயத்தில் இம்முறை சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களாவர்.
கறுப்பங்கேணியை சேர்ந்த டானியல் றோகித் (16வயது), இருதயபுரத்தினை சேர்ந்த நிரோசன் பிரவீன் (16வயது) ஆகியோரோ உயிரிழந்துள்ளனர்.
கடற்பகுதியில் குளித்துக்கொண்டிருக்கும் போது – அலையில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரண விசாரணையை தொடர்ந்து சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளன.