‘நாம் ஊடகர் பேரவை’ உப தலைவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு

🕔 April 20, 2023

‘நாம் ஊடகர் பேரவை’யின் (We Journalists Forum) உப தலைவர் ரி.கே. றஹ்மதுல்லா, சமுர்த்தி முகாமையாளராக பதவி உயர்வு பெற்றமைக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வொன்று நேற்று முன்தினம் (18) இடம்பெற்றது.

அட்டாளைச்சேனையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு ‘நாம் ஊடகர் பேரவை’யின் செயலாளர் ஏ.சி. றிசாட் தலைமை தாங்கினார்.

இதன்போது சமுர்த்தி முகாமையாளராக பதவி உயர்வு பெற்ற ரி.கே. றஹ்மதுல்லாவுக்கு பேரவையின் உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, பரிசில்கள் வழங்கியும் கௌரவித்தனர்

பேரவையின் பொருளாளர் என்.எம். புவாட், உப தலைவர்களில் ஒருவரான ஏ.பி. அப்துல் கபூர், தலைவர் யூ.எல். மப்றூக் உட்பட உறுப்பினர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து இப்தார் நிகழ்வும் இடம்பெற்றது.

இதன்போது ‘நாம் ஊடகர் பேரவை’ (We Journalists Forum) உறுப்பினர்களின் தொழில் நடவடிக்கையை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்