இனங்களின் பெயர்களைக் கொண்ட கட்சிகள் உள்ளபோது, சிங்கலே எப்படி தவறாகும்; ஞானசார கேள்வி

🕔 January 17, 2016

Gnanasara thero - 01‘இலங்கை தமி­ழ­ரசு கட்சி’ என்று ஓர் இனத்தின் அடை­யா­ளத்தை மைய­மாகக் கொண்டு, அர­சியல் கட்­சி­யொன்றை அமைப்­பது நியா­ய­மென்றால் ‘சிங்­கலே’ என்ற வாச­கத்­துடன் அமைப்­பொன்றை உருவாக்­கு­வது எந்­த­வ­கையில் தவ­றாகும் என, பொது பல­சே­னாவின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சா­ர தேரர் கேள்வி எழுப்­பினார்.

இந்த அர­சாங்கம் சிங்­கள மக்­களை உதா­சீ­னப்­ப­டுத்தி தான்தோன்­றித்­த­ன­மாக செயற்பட்டுக் கொண்டிருக்­கி­றது. இதனால் விரக்­தி­ய­டைந்­துள்ள சிங்­கள இளை­ஞர்கள் அரசாங்கத்தின் இவ்வாறான செயற்­பா­டு­களை தடுத்து, தமது அடை­யா­ளத்­தினை பாது­காப்­ப­தற்­கென உருவாக்கப்பட்ட ஓர் அமைப்­பா­கவே ‘சிங்­கலே’ அமைப்பை – தான் கரு­து­வ­தா­கவும் அவர் குறிப்பிட்டார்.

‘சிங்­கலே’ அமைப்பு நாட­ளா­விய ரீதியில் தமது வாசகம் மற்றும் இலச்­சினை பொறிக்­கப்­பட்ட
ஸ்டிக்­கர்­களை, வாக­னங்­க­ளிலும் வர்த்­தக நிலை­யங்­க­ளிலும் ஒட்டி வரு­கின்­றனர். இது தொடர்பில் கருத்துக் கேட்ட போதே ஞான­சா­ர­தேரர் இவ்­வாறு குறிப்­பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்;

“இந்த புதிய அர­சாங்கம் மிகவும் தவ­றான பாதையில் பய­ணித்­துக்­கொண்­டி­ருக்­கி­றது. இதனால் நாட்டின் தேசிய பாது­காப்பு கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ள­துடன், நாட்டின் எதிர்­கா­லமும் சவாலுக்குள்ளாகி­யி­ருக்­கி­றது என்­பதை தற்­போது காண­மு­டி­கி­றது.

நாட்­டுக்கு பாரிய அச்­சு­றுத்­த­லாக இருந்த புலிகள் இயக்­கத்தை கடந்த அர­சாங்கம், பல்லாயிரக்கணக்­கான உயிர் தியா­கங்­க­ளோடு துடைத்­தெ­றிந்­தது. இதனை எவ­ராலும் மறுக்­கவோ மறைக்­கவோ முடி­யாது.

இவ்­வாறு எமது முப்­ப­டை­யி­னரும், தமது உயிரை பணயம் வைத்து எமக்கு பெற்­றுக்­கொ­டுத்த அமை­திச்­சூ­ழலை மீண்டும் குழப்­பி­ய­டிக்க எவ­ருக்கும் இட­ம­ளிக்கக் கூடாது.

இன்று வடக்­கி­லுள்ள ரா­ணுவ முகாம்கள் பல அகற்­றப்­பட்­டுள்­ளன. சிறை­களில் அடைக்கப்பட்டிருந்த விடு­தலை புலி உறுப்­பி­னர்கள் பலர் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ள­துடன், எஞ்சி­யோ­ரையும் விடு­விக்க அர­சாங்கம் முயன்று வரு­கி­றது.இது மிகவும் பயங்­க­ர­மா­னதும் பாரதூர­மா­ன­து­மான செயற்­பா­டாகும்.

புலிகள் இயக்­கத்தின் ஆயு­த­ரீ­தி­யான செயற்­பா­டுகள் தோற்­க­டிக்­கப்­பட்­டாலும், அவர்­களின் ஏனைய செயற்­பா­டுகள் இன்னும் முற்­றுப்­பெ­ற­வில்லை. அவை தேசிய ரீதி­யிலும் சர்­வ­தேச ரீதி­யிலும் மிக தெளி­வா­கவும் துல்­லி­ய­மா­கவும் செயற்­ப­டுத்­தப்­பட்­டுக்­கொண்­டி­ருப்­பதை கருத்திற் கொள்ள வேண்டும்.

எனவே, எமது நாட்டின் உள்­ளக விவ­கா­ரங்­க­ளையும் சர்­வ­தேச நகர்­வு­க­ளையும் அதற்­கேற்ற வகையில் முன்­னெ­டுக்க வேண்டும். இல்­லையேல் எமது அடை­யாளம் அழிக்­கப்­ப­டு­வ­துடன் மீண்டும் நாட்டில் பிரி­வி­னை­வா­தமும் பயங்­க­ர­வா­தமும் தலைத்­துக்கும் நிலை உரு­வா­கக்­கூடும்.

இவ்­வா­றான நிலை­யி­லி­ருந்து நாட்­டையும் நாட்டு மக்­க­ளையும் பாது­காக்க வேண்­டிய பொறுப்பு யாவ­ருக்கும் உள்­ளது. தமது அடை­யா­ளத்தை பாது­காத்து அரசின் தவ­றான பய­ணத்தை தடுப்பதற்காக, இளை­ஞர்­களால் உரு­வாக்­கப்­பட்ட ‘சிங்­கலே’ அமைப்­பா­னது, நல்­ல­தொரு செயற்பாடாகும். அதில் எவ்­வித தவறும் இல்லை. அவ்­வா­றான அமைப்பை அமைக்கும் சகல உரி­மையும் அவர்­க­ளுக்கு உண்டு.

தமிழரசு கட்சி, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் போன்ற பல கட்சிகள் தமது இன, குழு அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் கட்சிகளின் பெயர்களை வைத்துள்ளனர். இவ்வாறான பெயர்களுக்கு அரசாங்கமும் எந்த வகையிலும் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. இவ்வாறான நிலையில் ‘சிங்­கலே’ என்ற அமைப்பை ஏன் எதிர்க்கும் வகையில் நோக்க வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்