உறுப்பினர்களற்ற நிலையைில் தென்கிழக்குப் பல்கலைக்கழக பேரவை

🕔 February 22, 2023

– அஹமட் (புதிது செய்தியாளர்) –

தென்கிழக்குப் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களின் பதவிக் காலம் கடந்த ஜனவரியுடன் நிறைவடைந்துள்ள போதிலும், இதுவரை பேரவைக்கு புதிய உறுப்பினர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை.

அந்த வகையில் சுமார் – ஒரு மாத காலமாக உறுப்பினர்களற்ற நிலையில் பேரவை உள்ளது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேரவை 19 உறுப்பினர்களைக் கொண்டது. இவ் உறுப்பினர்களில் 09 பேர் பதவி வழியாக பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவப் படுத்துகின்றவரகளாகவும் பல்கலைக்கழக மூதவை (செனற்) பிரதிநிதிகளாகவும் இருப்பர். 10 உறுப்பினர்கள் வெளியிலிருந்து தெரிவுசெய்யப்படுவர். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு – வெளி உறுப்பினர்களை நியமிக்கும்.

பல்கலைக்கழகமொன்றின் உயர் சபையாக – பேரவை காணப்படுகிறது. பேரவையின் அங்கிகாரமின்றி பல்கலைக்கழகமொன்றின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்