தேர்தலை நடத்துவதற்கான நிதியை ஒதுக்காமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு

🕔 February 21, 2023

ள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்காக 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்காமைக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானத்தின் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி, இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின்ன் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார – இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

நிதியமைச்சின் செயலாளர், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பிரதிவாதிகளாக இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்