தேர்தலை பிற்போடக் கூடாது: மஹிந்த ராஜபக்ஷ

🕔 February 21, 2023

ள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (21) தெரிவித்துள்ளார்.

“உள்ளூராட்சி தேர்தலை யார் ஒத்திவைக்கப் போகிறார்கள்? தேர்தல் என்பதன் அர்ததம் ஒத்தி வைத்தல் அல்ல. தேர்தல் திட்டமிட்டபடி நடக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்” என்று அவர் நாடாளுமன்றத்தில் ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து – எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபைக்குள் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டார்.

தொடர்பான செய்தி: தேர்தலை நடத்துமாறு நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டம்: சபை நடவடிக்கை நாளை வரை ஒத்தி வைப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்