சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன கைது: குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் தகவல்
சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துங்கொட நேற்று இரவு கணினி குற்றப் புலனாய்வு பிரிவின் விசேட குழுவினால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துபாயில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அவர் வந்தடைந்த போது கைதாகியுள்ளார்.
அரகலய போராட்டக்காரர்கள் அலரி மாளிகை வளாகத்தை கைப்பற்றிய தினத்தில், அதனை சமூக ஊடகங்களில் நேரலைக ஒளிபரப்பிய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவா கூறியுள்ளார்.
அவர் துபாய் செல்வதற்கு முன்னர் – இரண்டு தடவை கொழும்பில் உள்ள கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.