தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், அரச அச்சகத்துக்கு இன்னும் அனுப்பப்படவில்லை
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்னும் அரசாங்க அச்சகத்துக்கு அனுப்பப்படவில்லை.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் கூடிய வர்த்தமானி அறிவித்தல், அச்சிடுவதற்கு அரச அச்சகத்துக்கு இன்னும் அனுப்பப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏற்கனவே முடிவடைந்து விட்டது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழு – உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான வர்த்தமானி அறிவித்தல், இன்னும் அரச அச்சகத்துக்கு அனுப்பப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.