வாக்குச் சீட்டுக்கள் அச்சிடும் பணி ஆரம்பம்; காகிதம் கையிருப்பில் உள்ளது: அரச அச்சகர் தெரிவிப்பு

🕔 January 28, 2023

ள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்காக, உரிய ஆவணங்கள் – அரச அச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் இடம்பெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்களுக்கு அமைய தயாரிக்கப்பட்ட வாக்குச் சீட்டுக்களை, அரச அச்சகத்துக்கு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் அனுப்பியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க கூறியுள்ளார்.

இந்த நிலையில், மாவட்ட மட்டங்களில் கிடைக்கப் பெற்ற வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே குறிப்பிட்டுள்ளார்.

வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்குத் தேவையான காகிதங்கள் உள்ளிட்ட மூலப்பொருட்கள், அரச அச்சகத்தின் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்