டயானாவின் குடியுரிமை தொடர்பில், பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திடம் அறிக்கை பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு

🕔 January 5, 2023

ராஜாங்க அமைச்சர் டயானா கமகேயின் குடியுரிமை தொடர்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திடம் இருந்து உடனடியாக அறிக்கையைப் பெறுமாறு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது.

டயனா கமகேவின் பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு என்பன போலியானவை எனவும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரி சமூக ஆர்வலரான ஓஷல ஹேரத் சமர்ப்பித்த முறைப்பாடு – இன்று (05) அழைக்கப்பட்ட போதே கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

உரிய தூதரக அறிக்கை கிடைத்த பின்னர், வழக்கு தொடர்பான உத்தரவுகளை பிறப்பிப்பது இலகுவாக இருக்கும் எனவும், அதுவரை சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு உத்தரவு பிறப்பிப்பது பொருத்தமானதல்ல எனவும் நீதவான் இதன்போது கூறினார்.

இந்த வழக்கை விசாரிக்கும் போது இது தொடர்பான உத்தரவுகளை பிறப்பிப்பதற்கு சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் அவசியமில்லை என தோன்றுவதாகவும் நீதவான் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்