அக்கரைப்பற்று நீதிமன்றுக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் மூவர் கைது: சந்தேக நபர்கள் கோளாவிலைச் சேர்ந்தவர்கள்
– முன்ஸிப் –
அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு தீ வைத்த குற்றறச்சாட்டில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அக்கரைப்பற்று பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளதாக தெரிய வருகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் கோளாவில் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
சந்தேக நபர்கள் கைது செய்யப்படும் போது, அவர்களிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருளும் சிக்கியதாக அறியக் கிடைக்கிறது.
கைது செய்யப்பட்டோர், நாளை அக்கரைப்பபற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
இம்மாதம் 21ஆம் திகதி அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டடத் தொகுதி தீயில் எரிந்தது.
இதன்போது நீதிமன்ற ஆவணப்பகுதி முற்றாக நாசமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்பான செய்தி: அக்கரைப்பற்று நீதிமன்றக் கட்டடத்தில் தீ: 16 ஆயிரம் கோப்புகள் நாசம் எனத் தகவல்