அக்கரைப்பற்று நீதிமன்றத்துக்கு தீ வைக்கப்பட்டதாக தகவல்: 03 பேர் சம்பந்தப்பட்டடுள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு

🕔 December 23, 2022
சந்தேக நபர்

க்கரைப்பற்று நீதிமன்ற கட்டித் தொகுதிக்கு சிலர் தீ வைக்கும் சிசிரிவி காணொளி வெளியாகியுள்ளது. குறித்த நபர்கள் தொடர்பாக அடையாளம் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த நீதிமன்ற கட்டிடத் தொகுதி நேற்று (21) அதிகாலை கட்டிடம் தீ பற்றியதையடுத்து, பொலிஸார் மற்றும் தீயணைக்கும் படையுனர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இருந்தபோதும் கட்டிடத்திலுள்ள வழக்கு பதிவேட்டு அறை மற்றும் திறந்த நீதிமன்றம் உட்பட பல பரிவுகள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளதுடன் கட்டிடத்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், நீதிமன்றத்துக்கு அருகிலுள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவியில் 3 பேர் முகத்தை மூடியவாறு நீதிமன்ற வளாகத்தில் நுழைந்து கட்டடத்துக்கு தீ வைத்துவிட்டு தப்பி ஓடும் காட்சி பதிவாகியுள்ளது .

இது தொடர்பாக விசேட பொலிஸ் குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நபர் தொடர்பாக அடையாளம் தெரிந்தவர்கள் உடன் பொலிஸாருக்கு தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்

தொடர்பான செய்தி: அக்கரைப்பற்று நீதிமன்றக் கட்டடத்தில் தீ: 16 ஆயிரம் கோப்புகள் நாசம் எனத் தகவல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்