மந்த போசனையினால் பாதிக்கப்பட்ட 21 ஆயிரம் சிறுவர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

🕔 November 30, 2022

நாட்டில் மந்தபோசனையால் பாதிக்கப்பட்டுள்ள 21 ஆயிரம் சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள பரிசோதனைகளுக்கு அமைய இந்த விடயம் வெளிப்பட்டுள்ளது.

குறித்த எண்ணிக்கை 40 ஆயிரம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

“கடந்த காலங்களில் இடம்பெற்ற உணவு விநியோகம் மற்றும் உணவு பாதுகாப்பின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மிகவும் பாதிப்படைந்த எதிர்கால சந்ததியினரை உருவாக்குவதற்கு நாம் எதிர்பார்க்கவில்லை.

எனவே, இந்த விடயம் தொடர்பில் முழுமையான அவதானம் செலுத்தப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்