சிகிச்சை பெறச் சென்ற அமைச்சரை திட்டிய நபர் கைது
அமைச்சர் திரான் அலஸை திட்டியதாகக் கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ‘லங்காதீப’ செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பு 5 இல் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அமைச்சர் சிகிச்பை பெறுவதற்காக வந்திருந்த போது, கடந்த வியாழக்கிழமை (3) இச்சம்பவம் நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
அமைச்சரைக் கண்டதும் சந்தேக நபர் அவரை திட்ட ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அந்த இடத்தில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸ் குழுவொன்று சம்பவ இடத்துக்குச் சென்று சந்தேக நபரைக் கைது செய்துள்ளது.
சந்தேக நபர் கொழும்பு 5, அந்தரவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்னர்.