எரிபொருள் நிலையத்திலுள்ள இரண்டு பம்ப்களுக்கு ‘சீல்: மோசடி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து நடவடிக்கை

🕔 September 29, 2022

கொழும்பு 07 இல் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிலுள்ள இரண்டு பம்ப்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (29) தெரிவித்துள்ளது.

92 ஒக்டெய்ன் பெற்றோல் வழங்குகம் மூன்று பம்ப்களில் இரண்டுக்கு இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜங்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த எரிபொருள் நிலையம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமானது என அவர் கூறியுள்ளார்.

மேற்படி பம்ப்கள் ஊடாக லீற்றருக்கு 1.2 சதவீதம் (5 ரூபா 40 சதம் பெறுமதியான) பெற்றோல் குறைவாக வழங்கி மோசடி செய்தமைக்காக இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்