மஹிந்தவின் வீட்டை புனரமைக்க 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு: வெளியான தகவலுக்கு ரணில் பதில்

🕔 August 31, 2022

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தை புனரமைக்க, அரச நிதியில் இருந்து 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (310 நிராகரித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார, இன்று சபையில் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இந்த விடயத்தை நிராகரித்தார்.

“மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தை புனரமைக்க நாங்கள் 400 மில்லியன் ரூபா அல்ல, வெறும் நான்கு ரூபாவைக் கூட செலவு செய்யவில்லை. இருந்தபோதிலும், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களின் விதவை மனைவியரைக் கவனிப்பதற்கு சட்டரீதியாக நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்று இதன்போது ஜனாதிபதி ரணில் குறிப்பிட்டார்.

முன்னதாக மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டுக் கூரை வழியாக மழை நீர் ஒழுகுகிறதா என, நாடாளுமன்ற உறுப்பினர் பண்டார கேள்வி எழுப்பினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்