பொதுஜன பெரமுனவின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணில் இணைவு

🕔 August 31, 2022

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணியில்  இணைந்துள்ளனர்.

இதனை நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான ஜி.எல். பீரிஸ், இன்று (31) நாடாளுமன்றில் அறிவித்தார்.

இதன்படி, பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், டலஸ் அழகபெரும, பேராசிரியர் சன்ன ஜயசுமன, பேராசிரியர் சரித்த ஹேரத், கலாநிதி நாலக்க கொடஹேவா, குணபால ரத்ணசேகர, கலாநிதி உபுல் கலப்பத்தி, திலக் ராஜபக்ஷ, டிலான் பெரேரா, உதயன கிரிந்திகொட, வசந்த யாப்பா பண்டார, கே.பி.எஸ். குமாரசிறி மற்றும் லலித் எல்லாவல  ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களாக எதிர்க்கட்சியில் அமரவுள்ளதாக அவர் அறிவித்தார்.

இன்று 2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெறுகிறது.

இதன்போது, விசேட உரையொன்றை நிகழ்த்திய நாடாளுமன்ற பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இதனை அறிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்