இடைக்கால வரவு – செலவுத் திட்டம்: சுருக்கமாக அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்

🕔 August 30, 2022

டைக்கால வரவு – செலவுத் திட்டத்தை இன்று (30) நிதியமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் சமர்ப்பித்ததோடு, பல திட்டங்களையும் முன்மொழிந்தார்.

இதன்போது சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதாகவும், அவை இறுதிக்கட்டத்தை நெருங்கியிருப்பதாகவும்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

இடைக்கால வரவு செலவுத்திட்டத்தின் முன் மொழிவுகள் வருமாறு;

* 2021ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.2% ஆக உள்ள அரசாங்க வருமானத்தை 2025க்குள் 15% ஆக உயர்த்த எதிர்பார்க்கப்படுகிறது.

* 25 ஆண்டுக்கான தேசிய பொருளாதாரக் கொள்கை உருவாக்கப்படும்.

* ஒக்டோபர் 01 முதல் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி 12 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்படும்.

* கடந்த காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பல வரித் திட்டங்கள் ஒக்டோபர் முதல் அமுல்படுத்தப்படும்.

* 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.

*அரச மற்றும் அரச சார்பு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக குறைக்கப்படும். தற்போது பணியில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட அரச ஊழியர்கள் டிசம்பர் 31ம் திகதி ஓய்வு பெற வேண்டும்.

* இரத்திரனியல் மின்சார வாகனங்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்படும்.

* வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய திட்டங்கள் 2023 வரவு – செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டும்

* அரச வளங்களின் அபிவிருத்திக்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* பாதுகாப்பு மூலோபாய விடயங்களில் மறுசீரமைப்புக்கு முன்மொழிவு.

* அரச நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் கழிவுப்பொருட்களை அகற்றும் முழு செயல்முறையையும் கண்காணிக்க அரச அதிகாரிகளைக் கொண்ட குழு நியமிக்கப்படும்

* பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண மானியம் தொடர்ந்து வழங்கப்படும்

* தட்டுப்பாடின்றி எரிவாயு விநியோகம் உறுதிசெய்யப்படும். இதற்காக 25 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

* உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை.

* மண்ணெண்ணெய் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு மானியம்.

* முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்கு 5,000 ரூபா முதல் 7,500 ரூபா வரை உதவித்தொகை வங்கப்படும்.

* பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக பல திருத்த சட்ட மூலங்கள் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

* விவசாய அபிவிருத்திக்காக   புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் இளைஞர்களை விவசாயத்தில் உள்வாங்குவதற்கும்  நடவடிக்கை.

* வேலையற்று இருக்கும்  குழுக்களுக்கு 20 ஏக்கர் நிலம் வழங்க நடவடிக்கை.

* கர்ப்பிணி பெண்களுக்காக தற்போது வழங்கப்படும் 2000 ரூபா பெறுமதியான உணவுப் பொருள் பொதிக்கு மேலதிகமாக 2,500 ரூபா வழங்கப்படும்.

* சமுர்த்தி பயனாளிகள் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான கொடுப்பனவுகள் 5,000 ரூபாவில் இருந்து 7,500 ரூபாவாக அதிகரிக்கப்படும்.

* தேசிய கடன் முகாமைத்து நிறுவனம் உருவாக்கப்படும்.

* தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

* வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இலங்கையில் கிளைகளை திறப்பதை ஊக்குவிக்கும் வகையில் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

* வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதற்கும் மத விழாக்களில் கலந்துகொள்வதற்குமாக இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

* அரச வங்கிகளின் 20% பங்குகள் அதன் ஊழியர்கள் மற்றும் வைப்பீட்டாளர்களுக்கு வழங்கப்படும்.

* மின்சார மோட்டார் சைக்கிளை தயாரிப்பதற்கு தேவையான பாகங்கள் மற்றும் உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு வரிச்சலுகை வழங்கப்படும்.

* வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்காக புலம்பெயர் அலுவலகம் மற்றும் நிதியம் ஒன்று நிறுவப்பபடும்

* ஊழலை ஒழிக்க நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய சட்டங்கள் மற்றும் பொறிமுறை அறிமுகப்படுத்தப்படும்.

* களனி ரயில் பாதையை அபிவிருத்தி செய்வதற்கு முதலீட்டாளர்களிடம் இருந்து பெறுகைகள் கோரப்படவுள்ளது.

* சிறு விவசாயிகள் மே மாதம் வரை அரச வங்கிகளில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். இதற்காக வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய 680 மில்லியன் ரூபா  திறைசேரியால் செலுத்தப்படும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்