பொருளாதார அபிவிருத்தி தொடர்பான அமைச்சை ஏற்கத் தயார்: தம்மிக பெரேரா

🕔 August 30, 2022

பொருளாதார அபிவிருத்தி தொடர்பான அமைச்சுப் பதவியை ஏற்கத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரான அவர் கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே, தம்மிக பெரேரா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமராக இருக்கும் போது ரணில் விக்ரமசிங்கவை நிதியமைச்சர் பதவியில் இருந்து விலகுமாறு தம்மிக பெரேரா கூறியிருந்தமை தொடர்பில் வினவியபோது, தாம் தொழில்நுட்ப அறிக்கையை மாத்திரமே வெளியிட்டதாக முன்னாள் அமைச்சர் கூறினார்.

குறிப்பிட்ட ஒரு விடயம் தொடர்பிலான அறிக்கையை மட்டுமே தாம் வெளியிட்டதாக மேலும் விளக்கமளித்த அவர்; ஜனாதிபதியுடன் தமக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார்.

பசில் ராஜபக்ஷ அவரின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையை ராஜிநாமா செய்தமையை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, தம்மிக பெரேரா நியமிக்கப்பட்டமை நினைவுகொள்ளத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்