சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரைத் தாக்கிய குற்றச்சாட்டில் மூவர் கைது

🕔 August 30, 2022

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கியமை தொடர்பில் மூன்று நபர்களை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

மே 10 ஆம் திகதி கொழும்பு – பெரஹெர மாவத்தையில் தனிநபர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தென்னகோன் சிறு காயங்களுக்கு உள்ளானார். ஆத்திரமடைந்த குழுவினர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் வாகனத்தையும் தாக்கி சேதப்படுத்தினர்.

31 மற்றும் 52 வயதுடைய பிடபெத்தர மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளில் வசிக்கும் சந்தேகநபர்கள் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி தாக்குதலில் சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியையும் பொலிஸார் நாடியிருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்