பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டோருக்கு 7500 ரூபா கொடுப்பனவு: பெற தகுதியானோர் விவரமும் அறிவிப்பு

🕔 July 1, 2022

பொருளாதார நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்த மாதம் தொடக்கம் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

இதன்படி பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 7500 ரூபாய் வழங்கப்படும் என அவர் ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார்.

உலக வங்கியின் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியின் ஊடாக இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சமுர்த்தி பயனாளிகள், சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் மருத்துவ சிகிச்சை பொறுவோர் உள்ளிட்டோர் இந்த கொடுப்பனவை பெறுவற்கு தகுதியானவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்