யோஷித ராஜபக்ஷ மனைவியுடன் நாட்டை விட்டு பறந்தார்

🕔 May 10, 2022

ஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாது புதல்வரும், பிரதமரின் தலைமை அதிகாரியுமான யோஷித ராஜபக்ஷ நேற்றைய தினம் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

யோஷித ராஜபக்ஷவும் அவரின் மனைவியும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் சென்றுள்ளனர்.

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகுவதாக அறிவிப்பதற்கு முன்னதாகவே, யோஷித நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

நேற்று அதிகாலையிலேயே, யோஷித ராஜபக்ஷ அவரின் மனைவியுடன் நாட்டை விட்டும் வெளியேறியுள்ளார் என்று, டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்