நாட்டில் அவசரகால நிலைமை பிரகடனம்

🕔 May 6, 2022

நாட்டில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் அவசரகால நிலைமையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரகடனப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 01ஆம் திகதி நாட்டில் அவசர கால நிலையை வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதி பிரகடனப்படுத்தியிருந்தியிருந்தார்.

பின்னர் சில நாட்களின் பின்னர் அது நீக்கப்பட்டிருந்தது.

தொடர்பான செய்தி: அவசரகால நிலைமை என்றால் என்ன?: ஓர் எளிய விளக்கம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்