நீதியமைச்சராக மீண்டும் அலி சப்றி நியமனம்
நீதியமைச்சராக மீண்டும் சிரேஷ்ட சட்டத்தரணி அலி சப்றி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் அவர் இன்று (26) பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
நிதியமைச்சருக்கு மேலதிகமாக அவருக்கு நீதியமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிதியமைச்சராக சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை முடித்து விட்டுத் திரும்பியுள்ள நிலையில், அலி சப்றிக்கு அவர் முன்னர் வகித்த நீதியமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.