பிரதமர், அரசாங்கம் பதவி விலக வேண்டுமென பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் ஜனாதிபதிக்கு அறிவிப்பு
பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலகவேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர் என்று ராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெனாண்டோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு வழிவகுத்து, பிரதமர் மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, அலரிமாளிகையில் இன்று (26) அமைச்சர்கள், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களின் ஒன்றியத்தினருக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.
அதன்போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது அரசாங்கமோ பதவி விலகக் கூடாது என, மாகாண சபை உறுப்பினர்களின் ஒன்றியம் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.
இதனையடுத்து. தான் பதவி விலக போவதில்லையென்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.