12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை

🕔 March 12, 2022

லிட்ரோ நிறுவனத்தின் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை 850 ரூபாவினால் அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் அந்த நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, லிட்ரோ நிறுவனம் இன்று (12) பல பகுதிகளுக்கு எரிவாயுவை விநியோகித்தது.

இருப்பினும், சில பகுதிகளில், எரிவாயு வாங்க வந்த வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது.

நேற்றும், இன்றும் சுமார் 200,000 எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிட்டதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்